299963803 377862514510411 963139856606679809 n
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

முல்லை. மீனவர்களின் கவனயீர்ப்பு போராட்டம்! – மகஜர் கையளிப்பு!

Share

எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு தீர்வு கோரியும், இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை கட்டுப்படுத்தக் கோரியும், சட்டவிரோத தொழில்களை தடுத்து நிறுத்த கோரியும் முல்லைத்தீவு மீனவர்கள் முல்லைத்தீவு நகரில் கவனயீர்ப்பு மாபெரும் போராட்டமொன்று இன்று(16) காலை 10.00 மணிக்கு முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு மீனவ சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்பட்ட குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமானது,
* தடையின்றி மண்ணெண்ணை வழங்க வேண்டும்.
* மானிய விலையில் மண்ணெண்ணை வழங்க வேண்டும்.
* இந்திய இழுவைப் படகுகளின் வருகையினை தடை செய்ய வேண்டும்.
* 3 மாதத்திற்கான இழப்பீடு வழங்க வேண்டும்.
* சட்டவிரோத மீன்பிடி தொழில்கள் அனைத்தும் தடைசெய்ய வேண்டும்.
* ஒயிலின் விலை குறைக்க வேண்டும் .
முதலான கோரிக்கைகளை முன்வைத்து இடம்பெற்றிருந்தது.

கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமானது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தை வந்தடைந்ததைத் தொடர்ந்து மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம் ) க.கனகேஸ்வரன் அவர்களிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. இதன்போது மேலதிக அரசாங்க அதிபர் (காணி)எஸ். குணபாலன் மற்றும் நிர்வாக உத்தியோகத்தரும் திருமதி விக்னேஸ்வரன் ஆகியோர் பிரசன்னமாகி இருந்தனர்.

குறித்த மகஜர் ஜனாதிபதி, பிரதமர், கடற்றொழில் அமைச்சர் மற்றும் எரிசக்தி அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

300048383 377862637843732 5867321228756129927 n 299995975 377862871177042 1634828862293942546 n 299915761 377865121176817 2062212696132758004 n

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...