Mother
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

காணாமல்போன மகன் குறித்த தகவல் தெரியாமலேயே உயிரிழந்த தாய்!

Share

காணாமல் போன தன் மகனைத் தேடி அலைந்து வந்த தாய் ஒருவர் சுகயீனம் காரணமாக இன்று உயிரிழந்துள்ளார்.

வவுனியா- பூம்புகார் கல்மடு பகுதியைச் சேர்ந்த கருப்பையா ராமாயி (வயது 78) என்ற தாயே இவ்வாறு சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

அவரது வளர்ப்பு மகனான ரா.இந்திரபாலன் (வயது 38) கடந்த 2007ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து, வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.

காணாமல் ஆக்கப்பட்ட தன் மகனைத் தேடி கடந்த 1799 நாட்களாக வவுனியாவில் மேற்கொள்ளப்பட்ட சுழற்சி முறை உணவுத் தவிர்ப்பு போராட்டத்திலும் குறித்த தாய் பங்கேற்றிருந்தார்.

Mother son

இந்த நிலையில் அவர், தனது மகன் குறித்த எவ்வித தகவலும் தெரிந்துகொள்ளாமல் இன்று (21) உயிரிழந்துள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...