302250282 6391639234196952 8442531931639933221 n e1662614582292
இலங்கைசெய்திகள்

மூன்று குட்டிகளை பிரசவித்த தாய் புலி உயிரிழப்பு!

Share

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் கடந்த ஜுன் மாதம் பரபரப்பாக பேசப்பட்ட மூன்று வங்காளப் புலிக்குட்டிகளை பிரசவித்த தாய் புலி உயிரிழந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 5ஆம் திகதி அகிரா, டுமா மற்றும் லியோ என்ற குட்டிகளை பிரசவித்த தாய் புலி கடுமையான புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மிருகக்காட்சிசாலையின் கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடைத் துறை ஊழியர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில் உயிரிழந்துள்ளது.

“கெல்லா” என்ற பெயருடைய தாய் புலி தனது குட்டிகளை மிகவும் அன்பான பார்த்த தாயாக இருந்ததாகவும். இறக்கும் போது சுமார் 15 வயது. என மிருகக்காட்சிசாலையின் பேச்சாளர் தெரிவித்தார்.

2008 ஆம் ஆண்டு சீனாவில் உள்ள சின்ஜியாங் சஃபாரி பூங்காவில் இருந்து விலங்கு பரிமாற்ற நிகழ்ச்சி மூலம் இலங்கையில் உள்ள தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு வரப்பட்டது. உடல் பிரேத பரிசோதனை மற்றும் பிற சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...