tamilni 317 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பில் மகனை பார்க்க சென்ற தாய் மரணம்

Share

கொழும்பில் மகனை பார்க்க சென்ற தாய் மரணம்

நீர்கொழும்பில் இருந்து மஹரகம வைத்தியசாலை வரை பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் உயிரிழந்த பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள இலக்கை அடைந்ததும் அங்கிருந்தவர்கள் பேருந்தில் இருந்து இறங்கியதாகவும், ஆனால் குறித்த பெண் பேருந்தில் இருந்து இறங்காததால் நடத்துனர், அவரை எழுப்ப முயற்சித்துள்ளார்.

இருந்த போதும் பதில் அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சாரதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பேருந்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

ஆடி அம்பலம் வல்பொல பகுதியைச் சேர்ந்த ராமகாந்தி என்ற 52 வயதுடைய ஆறு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரது மகன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், நீர்கொழும்பில் இருந்து மஹரகம வைத்தியசாலைக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்த போதே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெண்ணின் அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னர், மஹரகம பிரதேசத்திற்கு பொறுப்பான மரண விசாரணை அதிகாரி சடலத்தை பரிசோதித்து, களுபோவில போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை செய்து, சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் மருத்துவ அறிக்கையை ஆராய்ந்துள்ளார்.

அதற்கமைய, குறித்த பெண் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...