tamilni 317 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பில் மகனை பார்க்க சென்ற தாய் மரணம்

Share

கொழும்பில் மகனை பார்க்க சென்ற தாய் மரணம்

நீர்கொழும்பில் இருந்து மஹரகம வைத்தியசாலை வரை பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் உயிரிழந்த பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள இலக்கை அடைந்ததும் அங்கிருந்தவர்கள் பேருந்தில் இருந்து இறங்கியதாகவும், ஆனால் குறித்த பெண் பேருந்தில் இருந்து இறங்காததால் நடத்துனர், அவரை எழுப்ப முயற்சித்துள்ளார்.

இருந்த போதும் பதில் அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சாரதிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பேருந்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

ஆடி அம்பலம் வல்பொல பகுதியைச் சேர்ந்த ராமகாந்தி என்ற 52 வயதுடைய ஆறு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரது மகன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், நீர்கொழும்பில் இருந்து மஹரகம வைத்தியசாலைக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்த போதே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெண்ணின் அடையாளத்தை உறுதிப்படுத்திய பின்னர், மஹரகம பிரதேசத்திற்கு பொறுப்பான மரண விசாரணை அதிகாரி சடலத்தை பரிசோதித்து, களுபோவில போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை செய்து, சமர்ப்பிக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் மருத்துவ அறிக்கையை ஆராய்ந்துள்ளார்.

அதற்கமைய, குறித்த பெண் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....