விபத்தில் தாயும் மகனும் பலி

1595907417 Accident gelioya 2

கொழும்பு – குருநாகல் பிரதான வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் தாயும், மகனும் உயிரிழந்துள்ளதுடன், தந்தையும், மற்றொரு மகனும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கரவண்டி மீது டிப்பர் வாகனம் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பொரலஸ்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய தாயும், அவருடைய 18 வயதுடைய மகனுமே உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் டிப்பர் வாகன சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.

#SrilankaNews

Exit mobile version