1 4
இலங்கைசெய்திகள்

மஹிந்தானந்தவிற்கு எதிராக மேலும் ஒரு வழக்கு

Share

முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்தவிற்கு எதிராக மேலும் ஒரு வழக்குத் தொடரப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கரம் போர்ட் சம்பவம் தொடர்பிலேயே இந்த வழக்கும் தொடரப்பட உள்ளதாக சட்டத்துறைசார் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரம் போர்ட் சம்பவம் தொடர்பில், ஊழல் மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னதாக வழக்குத் தொடரப்பட்டு அதற்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த கரம் போர்ட் விநியோகம் குறித்த கொடுக்கல் வாங்கல்களில் சூழ்ச்சி செய்ததாக மஹிந்தானந்த மீது குற்றவியல் வழக்குத் தொடரப்பட உள்ளது.

குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் இந்த வழக்கு தொடரப்பட உள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் அப்போதைய செயலாளர் மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட உள்ளனர்.

கரம் போர்ட் விவகாரத்தில், மஹிந்தனாந்த அலுத்கமகேவிற்கு ஏற்கனவே 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...