24 66395bbed4e2b
இலங்கைசெய்திகள்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : வங்கிகளுக்கு வருகிறது பணம்

Share

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி தகவல் : வங்கிகளுக்கு வருகிறது பணம்

நெற்செய்கைக்கான பூந்தி உரம் அல்லது மியூரேட் ஒப் பொட்டாஷ் (MOP) கொள்வனவுக்கான பணம் இன்று (7) முதல் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒரு ஹெக்டேருக்கு 15000 ரூபாய் வீதம் பணம் வரவு வைக்கப்படவுள்ளது.

கடந்த சில பருவங்களில் நெல் சாகுபடிக்கு பூந்தி உரமிடுதல் அளவு குறைந்துள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நெற்பயிர்களை வலுப்படுத்துவதற்கும், நெல் விதைகளை முழுமையாக்குவதற்கும் எம்ஓபி உரத்தைப் பயன்படுத்துவது கட்டாயம் என்று விவசாயத் திணைக்களம் குறிப்பிடுகிறது.

அதிக பருவத்தில் எம்ஓபி உரம் 30,000 மெட்ரிக் தொன் தேவை என்றாலும், அதில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே விவசாயிகள் கொள்முதல் செய்துள்ளனர்.

குறிப்பாக நெற்செய்கையை முடித்துள்ள விவசாயிகளுக்கு இந்த நிதி ஒதுக்கீட்டை வழங்குமாறு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்தார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...