24 666140b3d7324
இலங்கைசெய்திகள்

மோடியின் வெற்றியால் இந்தியாவிற்கு அடிமையாகும் இலங்கை

Share

மோடியின் வெற்றியால் இந்தியாவிற்கு அடிமையாகும் இலங்கை

நடந்து முடிந்த இந்திய (India) நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இலங்கையை (Sri Lanka) மேலும் அடிமை நாடாக மாற்றவுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், நாளை மறுதினம் (08) மூன்றாவது தடவையாக பிரதமராக நரேந்திர மோடி (Narendra Modi) பதவியேற்கவுள்ளார்.

நரேந்திர மோடியின் பதவி நீடிப்பு இலங்கையின் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் பிரிவின் கலாநிதி அதுலசிறி சமரகோன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சமகாலத்தில் இலங்கை மீது இந்தியா செலுத்தும் அழுத்தம் மேலும் அதிகரிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டுக்குள் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) இதுவரை இணைந்து செயற்பட்டுள்ளதுடன் இந்தக் காலப்பகுதி இலங்கையின் பொருளாதாரம் இந்தியாவின் ஆதிக்கத்திற்குள் சிக்கியுள்ளது.

அத்தோடு, இலங்கையின் முதலீட்டு வலையமைப்புகள் பல இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளதோடு திருகோணமலை (Trincomalee) எண்ணெய் குதம் உட்பட பல்வேறு முதலீடுகள் இந்தியாவின் கைகளில் உள்ளதோடு இந்த நிலைமையே எதிர்காலத்திலும் தொடரும்.

இதனடிப்படையில், இது பொருளாதார ரீதியில் இலங்கையில் மிக்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...