10 22
இலங்கைசெய்திகள்

16 வது தேசிய போர் வீரர் நினைவு நிகழ்வு! பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

Share

16வது தேசிய போர் வீரர் நினைவு நிகழ்வு தொடர்பில் பாதுகாப்பு அமைச்சகம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி,16வது தேசிய போர் வீரர் நினைவு நிகழ்வு, 2025 மே 19 ஆம் திகதி மாலை 4:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நினைவு நிகழ்வு, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள தேசிய போர் வீரர் நினைவுச்சின்னத்தில் நடைபெறும் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தொடர்பில், பாதுகாப்பு அமைச்சகத்தால் நேற்று ஒரு செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், ஜனாதிபதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர கலந்து கொள்வார்.

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, அட்மிரல் ஒஃப் தி ஃப்ளீட் வசந்த கரன்னாகொட, மற்றும் மார்சல் ஒஃப் ஏர்ஃபோர்ஸ் உள்ளிட்ட இராணுவத் தலைவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

நாட்டின் போர் வீரர்களை கௌரவிப்பதிலும், அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்கு நாட்டின் கூட்டு நன்றியை மீண்டும் உறுதிப்படுத்துவதிலும், அனைத்து குடிமக்களும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.

Share
தொடர்புடையது
Tourist Visa
இலங்கை

இலங்கையர்களுக்கு அனுமதி இல்லை!

தாய்வான் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள புதிய வீசா கொள்கை அறிவிப்பின்படி, இலங்கை பிரஜைகளுக்கான சுற்றுலா வீசா...

dengue 1
இலங்கை

அறிகுறிகள் தென்பட்டால் ஆபத்து – உடனடியாக வைத்தியசாலையை நாடவும்.

டெங்கு அறிகுறிகள் தென்படுவோர் தாமதிக்காது உடனடியாக உரிய மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு...

chemmani Mass grave
இலங்கை

செம்மணிக்கு செல்ல ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழுவிற்கு நீதிமன்றம் பச்சைக்கொடி.

ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், செம்மணி மனிதப் புதைகுழிப் பகுதியை...

ஜி.எல். பீரிஸ்
இலங்கை

ஜெனீவாவில் இலங்கைக்கு இதுவும் நடக்கலாம் – எச்சரிக்கும் ஜி.எல். பீரிஸ்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்று நேற்று நடைபெற்றுள்ளது. அங்கு...