ratta
அரசியல்இலங்கைசெய்திகள்

போராட்ட செயற்பாட்டாளர் கணக்கில் பல மில்லியன் ரூபா வைப்பு! – சட்ட நடவடிக்கை விரைவில்

Share

தனக்கு தெரியாத நபர்களிடமிருந்து திடீரென தனது வங்கிக் கணக்கில் 50 லட்சம் ரூபா வரவு வைக்கப்பட்டதாக, காலிமுகத்திடல் போராட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரான ரெட்டா எனப்படும் ரதிது சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சம்பந்தப்பட்ட வங்கியில் முறைப்பாடு செய்திருப்பதாகவும், எதிர்காலத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தனது சமூகவலைத்தள கணக்கில் இது தொடர்பில் பதிவிட்டுள்ள அவர்,

போராட்டத்திற்காக தனிப்பட்ட பணத்தை செலவழித்ததாகவும், தனிப்பட்ட முறையில் எதனையும் பெறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில திடீரென எனது கணக்கிற்கு எவ்வித அறிவிப்புமின்றி 50 லட்சம் ரூபா வைப்பிடப்பட்டுள்ளது. நான் இதனை எடுத்து செலவு செய்த பின்னர் போராட்டம் மூலம் நிதி மோசடி செய்ததாகவும், டயஸ்போரா வலையில் சிக்கி விடுவேன் எனவும் இதனை வைப்பிட்டவர் திட்டமிட்டிருப்பார்.

நான் CIMA தகுதி பெற்ற கணக்காளர் ஒருவராகும். நான் பணத்திற்கு வளைந்து கொடுக்கக்கூடியவன் அல்ல என உங்களுக்கு தெரியும். இதுவரையில் போராட்டத்தில் தனிப்பட்ட இலாபம் எதுவும் பெறவில்லை.
எமது கைகள் 100 சதவீதம் சுத்தமாக இருந்தமையினாலேயே எம்மை அடக்குவதற்கு இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் சேறு பூசும் பிரச்சாரங்கள் குறித்து அலட்சியமாக இருக்க முடிந்தது.

இன்று திடீரென எனது கணக்கில் விழுந்த 5 மில்லியன் வைப்பிலிடப்பட்டமை தொடர்பில் சம்பத் வங்கியில் ஏற்கனவே முறைப்பாடு செய்துள்ளேன் என ரெட்டா குறிப்பிட்டுள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
2025 07 02T141641Z 2 LYNXMPEL610MU RTROPTP 4 HEALTH BIRD FLU
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் H5N5 பறவைக் காய்ச்சல் தொற்றால் ஒருவர் உயிரிழப்பு: 9 மாதங்களில் பதிவான முதல் மனித

அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத்தில், H5N5 பறவைக் காய்ச்சல் (H5N5 Avian Influenza) தொற்றினால் ஏற்பட்ட சிக்கல்கள்...

ln1efiok top 10 luxury cities of
உலகம்செய்திகள்

2025 ஆம் ஆண்டின் உலகின் முதல் 10 ஆடம்பர நகரங்கள் பட்டியல் வெளியீடு: பிரான்ஸின் பரிஸ் முதலிடம்!

உலக அளவில், வெறும் செல்வத்தை மட்டுமல்லாமல், அதைச் செலவழிக்கும் விதம் மற்றும் அதனுடன் கூடிய வாழ்க்கை...

21113858ad4369b
செய்திகள்உலகம்

பாகிஸ்தான் தொழிற்சாலை வெடி விபத்து: கொதிகலன் வெடித்ததில் 16 தொழிலாளர்கள் பலி!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பைசலாபாத் நகரில் அமைந்த மாலிக்பூர் பகுதியில் உள்ள ஒரு பசை...

MediaFile 15
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம்: கடலட்டைப் பண்ணையைப் பார்க்கச் சென்ற 17 வயதுச் சிறுவன் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் – குருநகர் கடற்பரப்பில் இன்று (நவம் 22) காலை, கடலுக்குச் சென்றிருந்த நிலையில் காணாமல்...