நாட்டில் நிலவும் பால்மா தட்டுப்பாடு தொடர்பில் அரசாங்கத்திடம் எவ்வித தீர்வுகளும் இல்லை என வர்த்தக அமைச்சு கையை விரித்துள்ளது.
தற்போது அத்தியாவசிய பயன்பாட்டுப் பொருட்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
ஏனெனில் தொடர்ந்தும் இறக்குமதி செய்வதற்கு டொலர் தட்டுப்பாடு நிலவுவதால், அத்தியாவசியப் பொருட்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
அசாதாரணமாக இலாபம் பெற்ற வெளிநாட்டு நிறுவனங்கள், இவ்வாறான துன்பியல் நிலையில் குறுகிய காலத்திற்கு தமது வினியோகஸ்தர்களுக்கு கடன் வசதியை ஏற்படுத்திக்கொடுத்து பால் மாவை வினியோகிக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் வர்த்தக அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
#SrilankaNews