tamilni 256 scaled
இலங்கைசெய்திகள்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கூட்டு இராணுவப் பயிற்சி

Share

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கூட்டு இராணுவப் பயிற்சி

மித்ரா சக்தி 2023 என்ற இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கூட்டு இராணுவப் பயிற்சியின் ஒன்பதாவது பதிப்பு புனேவில் நேற்று தொடங்கியது.

இரண்டு தரப்பு துருப்புக்களிடையே ஒரு மேம்பட்ட அளவிலான இயங்குநிலையை அடைவதில் கவனம் செலுத்தும் வகையில் இந்த பயிற்சிகள் அமையும் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

120 வீரர்களைக் கொண்ட இந்தியக் குழுவில் முக்கியமாக மராத்தா காலாட்படை படைப்பிரிவின் துருப்புக்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கை தரப்பில் 53ஆவது காலாட்படை பிரிவின் வீரர்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள்.

இந்திய விமானப்படையைச் சேர்ந்த 15 பேரும், இலங்கை விமானப்படையைச் சேர்ந்த ஐந்து வீரர்களும் இந்தப் பயிற்சியில் பங்கேற்கின்றனர் என்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....