13 5
இலங்கைசெய்திகள்

அதிரடியாக சீல் வைக்கப்பட்ட மதுபான உற்பத்தி ஆலை: அரசாங்கத்தின் திடீர் நகர்வு

Share

அதிரடியாக சீல் வைக்கப்பட்ட மதுபான உற்பத்தி ஆலை: அரசாங்கத்தின் திடீர் நகர்வு

டபிள்யூ. எம். நாகொட, வெலிசறையில் உள்ள மெண்டிஸ் & கம்பனியின் மதுபான உற்பத்தி ஆலைக்கு இன்று (5) சீல் வைக்கப்பட்டுள்ளது.

சட்ட விதிகளின்படி, மெண்டிஸ் நிறுவனம் மதுவரி மற்றும் அதனுடன் தொடர்புடைய 3% மேலதிகக் கட்டணமான 5.7 பில்லியன் ரூபாவையும் செலுத்த தவறியதன் காரணமாக நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமத்தை இன்று (5) முதல் இடைநிறுத்துமாறு மதுவரி ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.

உத்தரவின்படி, மதுவரி திணைக்களம் மற்றும் கம்பஹாவைச் சேர்ந்த மதுவரி அத்தியட்சகர்கள் மற்றும் அதிகாரிகள் குழு குறித்த சீல் வைக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

ஆறு மணி நேரத்துக்கும் மேலான கண்காணிப்புக்குப் பிறகு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜாஎல மற்றும் கம்பஹா மதுவரி அத்தியட்சகர்கள, இன்று முதல் டபிள்யூ. எம். மெண்டிஸ் மற்றும் கம்பெனியின் அனைத்து உற்பத்தி மற்றும் விநியோக நடவடிக்கைகளும் சாத்தியமில்லை என தெரிவித்துள்ளனர்.

வரி செலுத்தத் தவறிய மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமத்தை கடந்த நவம்பர் 30ஆம் திகதி முதல் இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் விஞ்ஞாபன முடிவொன்றை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
ahr0chm6ly9jyxnzzxr0zs5zcghkawdp 4
உலகம்செய்திகள்

துப்பாக்கியைப் பிடுங்கிய ‘ஹீரோ’ அஹமது அல் அஹமதுவைச் சந்தித்த பிரதமர் அல்பானீஸ்; துப்பாக்கிக் கட்டுப்பாடு மேலும் அதிகரிப்பு!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் (Bondi Beach) யூதர்கள் நிகழ்வில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டின்போது, துணிச்சலுடன்...

coverimage 01 1512114047 1546165239 1562741874
இலங்கைசெய்திகள்

இலங்கையில் எயிட்ஸ் தொற்று 6% அதிகரிப்பு:உயிரிழப்புகள் 30 ஆகப் பதிவு!

இலங்கையில் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில்...

images 5 5
உலகம்செய்திகள்

இந்தியா-ரஷ்யா இராணுவ ஒப்பந்தம்: ‘தளவாட ஆதரவு பரஸ்பரப் பரிமாற்ற’ சட்டத்துக்குப் புட்டின் ஒப்புதல்!

இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ‘Reciprocal Exchange of Logistics Support’ (தளவாட ஆதரவின் பரஸ்பரப்...

articles2FvNVHzqk0rGKKgejyoUzJ
இலங்கைசெய்திகள்

கல்வி ஒத்துழைப்பு வலுப்படுத்தல்: வெளிநாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அனுமதி!

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராகப் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்த...