speaker mahinda yapa abeywardena 700x375 1
அரசியல்இலங்கைசெய்திகள்

சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம்

Share

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று (28) பிற்பகல் 2.00 மணிக்கு நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெறும்.

அரசியலமைப்பை திருத்துவதற்கான முன்மொழிவுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக சபாநாயகர் இந்த கூட்டத்தை கூட்டியுள்ளதாக தெரிய வருகிறது.

நாடாளுமன்றத்தில் உள்ள சில கட்சிகள் மற்றும் குழுக்கள் அரசியலமைப்பை திருத்துவதற்கான யோசனைகளை சபாநாயகரிடம் ஏற்கனவே சமர்ப்பித்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியும் சுயாதீன குழுவொன்றும் சபாநாயகரிடம் அரசியலமைப்புதிருத்தத்தை கையளித்துள்ளன.

இதேவேளை, அடுத்தவாரம் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் விதம் மற்றும் அவற்றின் நிகழ்ச்சி நிரல் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...