செய்திகள்அரசியல்இலங்கை

மாணவர்கள் தாக்குதல்! – குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவி துறக்க தயார் என்கிறார் அருந்திக்க

Arundika Fernando
Share

களனி பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தனக்கு தொடர்பிருக்கின்றது என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால், அமைச்சு பதவியை துறப்பதற்கு தயார் – என்று இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவித்தார்.

இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மேற்படி சம்பவம் தொடர்பில் இன்று காலைதான் எனக்கு தெரியவந்தது. இதற்காக தென்னை அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரி ஒருவரும் இச் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார். எனவே, இவ் விடயம் தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் நான் பின்நிற்க மாட்டேன்.

இச் சம்பவத்துடன் எனக்கு தொடர்பிருக்கின்றது என சிலர் கூறுகின்றனர். அதனை நிரூபித்தால் நான் அமைச்சு பதவியில் இருந்து விலகுவேன்.

இது தொடர்பில் நியாயமான விசாரணையை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
19 9
உலகம்செய்திகள்

பயங்கரவாதிகளின் ஏவுகணை தளத்தை தாக்கி அழித்த இந்தியா

பாகிஸ்தானின் (Pakistan) சியால்கோட்டில் இயங்கி வந்த பயங்கரவாதிகளின் ஏவுகணை ஏவுதளம் இந்திய இராணுவத்தினரால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக...

17 9
இலங்கைசெய்திகள்

கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் இரவில் மந்திராலோசனை நடத்தும் அரசியல்வாதிகள்

சமகாலத்தில் கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் அரசியல் முக்கியஸ்தர்கள் இரகசிய சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு மாநகர...

20 10
உலகம்செய்திகள்

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலி எடுத்த முடிவு

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி(Virat Kholi) டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக...

18 9
உலகம்செய்திகள்

ஐபிலை தொடர்ந்து மற்றுமொரு கிரிக்கெட் தொடரும் ஒத்திவைப்பு..!

போர் பதற்றம் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக்2025 தொடரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் 2025...