செய்திகள்அரசியல்இலங்கை

மாணவர்கள் தாக்குதல்! – குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பதவி துறக்க தயார் என்கிறார் அருந்திக்க

Arundika Fernando
Share

களனி பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தனக்கு தொடர்பிருக்கின்றது என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமானால், அமைச்சு பதவியை துறப்பதற்கு தயார் – என்று இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ தெரிவித்தார்.

இவ் விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மேற்படி சம்பவம் தொடர்பில் இன்று காலைதான் எனக்கு தெரியவந்தது. இதற்காக தென்னை அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரி ஒருவரும் இச் சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார். எனவே, இவ் விடயம் தொடர்பில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் நான் பின்நிற்க மாட்டேன்.

இச் சம்பவத்துடன் எனக்கு தொடர்பிருக்கின்றது என சிலர் கூறுகின்றனர். அதனை நிரூபித்தால் நான் அமைச்சு பதவியில் இருந்து விலகுவேன்.

இது தொடர்பில் நியாயமான விசாரணையை நடத்துமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....