food mb
இலங்கைசெய்திகள்

நாட்டைக் காக்க ஒருவேளை உணவை தியாகம் செய்யுங்கள்!!!

Share

நாட்டில் அடுத்து வருகின்ற நாள்களில் ஒரு வேளை உணவை தியாகம் செய்யவேண்டிய நிலை நாட்டு மக்களுக்கு ஏற்படலாம்

இதனை நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜயத்குமார் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு தற்போது முடக்கப்பட்டுள்ளது. நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் வீடுகளில் இருந்து மக்கள் இவ்வாறு ஒரு வேளை உணவை தியாகம் செய்வதன் மூலம் கொரோனா அலையைக் கட்டுப்படுத்த முடியும்.

அத்துடன் நாட்டையும் எதிர்கால சந்ததியினரையும் அடுத்த கட்டம் நோக்கி அழைத்துச் செல்லக் கூடியதாக அமையும்.

எனவே மூன்று வேளை உணவு உண்டு வந்தவர்கள் அடுத்து வருகின்ற சில நாள்களில் இருவேளை உணவு உண்ண வேண்டிய நிலை வரலாம்.

நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் தியாகங்களை செய்தே வருகின்றனர்.

நாட்டின் தேசிய உற்பத்திகளை காக்கவும் ஊக்குவிக்கவுமே இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நாட்டில் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் உள்ளாடைகளை வைத்து அரசியல் செய்யாதீர்கள்.

இதேவேளை இவரின் இந்தக் கருத்துக்கு பல தரப்புக்களிலுமிருந்தும் கடும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன. அத்துடன் சமூக வலைத்தளங்கள் கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்துள்ளன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...