13
இலங்கைசெய்திகள்

கொழும்பு நகரின் 15 இடங்களில் மே தினக்கூட்டங்கள்

Share

கொழும்பு நகரின் 15 இடங்களில் இன்றைய தினம் மே தினக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

சர்வதேச தொழிலாளர் தினமான மேதினம் இன்றாகும். இலங்கையில் மே தினம் சம்பிரதாயபூர்வமாக அனுஷ்டிக்கப்படத் தொடங்கி 139 வருடங்கள் இன்று பூர்த்தியாகின்றது.

கடந்த 1956ம் ஆண்டு பதவிக்கு வந்த பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கமே இலங்கையில் மே தின நிகழ்வுகளுக்கு முதன்முதலாக அரச அனுசரணை வழங்கியதுடன், மே தினத்தை விடுமுறை தினமாகவும் அறிவித்தது.

ஆரம்ப காலங்களில் தொழிலாளர் அமைப்புகளால் கொண்டாடப்பட்ட மே தின நிகழ்வுகள் தற்போது அரசியல் கட்சிகளின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

அந்த வகையில் இந்த ஆண்டின் மேதின நிகழ்வுகளை முன்னிட்டு கொழும்பில் 15 இடங்களில் மேதின கூட்டங்கள், ஊர்வலங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

கொழும்புக்கு வெளியிலும் ஒருசில அரசியல் கட்சிகளின் மே தின நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
road closed
இலங்கை

வெள்ளப்பெருக்கினால் மூடப்பட்டுள்ள வீதிகள்.

தொடர்ந்தும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தற்போது பல பிரதேசங்களில் ஏராளமான வீதிகள் போக்குவரத்திற்கு தற்காலிகமாக...

ester attac 1
இலங்கை

பிள்ளையான் – சுரேஷ் சலே திண்டாட்டத்தில் இருப்பதாக வெளியாகிய தகவல்.

பிரித்தானியாவைச் சேர்ந்த இராணுவ ஆய்வாளர் பிரபாகரன், பிரபல ஊடக நிறுவன நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவிக்கும்...

Fire Breaks
இலங்கை

புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீ பரவல்.

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த...

உடற்கூற்று பரிசோதனை
இலங்கை

மஹர சிறைக்கலவரத்தில் உயிரிழந்த நபரின் உடற்கூற்று பரிசோதனை – வெளியான தகவல்கள்.

இன்றைய தினம், மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதியின் சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனை விசேட...