மசாஜ் நிலையம் சுற்றிவளைப்பு! – நால்வர் கைது!

202104050046437788 137 people arrested for alcoholism SECVPF

நீர்கொழும்பு, குரணை பகுதியில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிவந்த விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டு, நால்வர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நிலையத்தின் முகாமையாளரான பெண் மற்றும் விபச்சாரத்தில் ஈடுபடும் நோக்கத்தில் தங்கியிருந்த மேலும் மூன்று பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 20 முதல் 25 வயதுக்கு இடைப்பட்ட பலாங்கொடை, தெஹியத்தகண்டிய மற்றும் தொடுவா பகுதியைச் சேர்ந்தவர்கள்.

சந்தேக நபர்கள் இன்று (செப். 21) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version