image 30ecd79d97
அரசியல்இலங்கைசெய்திகள்

மேர்வின் விடுவிப்பு!

Share

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை பிணையில் விடுவிப்பது அவசியமில்லை எனவும், அடுத்த நீதிமன்றத் தினத்தில் நீதிமன்றில் முன்னிலையானால் போதுமானது எனவும் கொழும்பு மேலதிக நீதவான் கேமிந்த பெரேரா இன்று (18) உத்தரவிட்டுள்ளார்.

களனி பிரதேசத்தில் மாடு வெட்டுவதை தடுத்து நிறுத்திய சந்தேகநபருக்கு பிணை தேவையில்லை என நீதவான் திறந்த நீதிமன்றில் தெரிவித்தார்.

அதன் பின்னரே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

2007 ஆம் ஆண்டு ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் பலவந்தமாக நுழைந்து சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மேர்வின் சில்வா இன்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் சாட்சியங்களை சமர்ப்பித்ததுடன், 2007 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கைகளை சட்டமா அதிபரிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...