1629371978 1618491646 court 2
செய்திகள்இலங்கை

மருதனார் மட வாள்வெட்டு- கைதானவர்களுக்கு விளக்கமறியல்

Share

யாழ்ப்பாணம் மருதனார் மடம் சந்தியில் கடந்த 1 ஆம் திகதி பழக்கடை வியாபாரி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதாகிய ஐவரையும் எதிர்வரும் 06 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 1 ஆம் திகதி மருதனார் மட சந்தியில் பழக்கடை நடாத்தும் 04 பிள்ளைகளின் தந்தை மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 3 வாள்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில் நேற்று (26) நீதிமன்றில் சந்தேகநபர்கள் ஆஜர்ப்படுத்தப்பநிலையில் எதிர்வரும் 06 திகதி வரையில் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையில் யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ள வாள்வெட்டு வன்முறைச் சம்பவங்கள் சிலவற்றை இலங்கையிலிருந்து தப்பி இந்தியாவுக்கு சென்ற சிலர் வழிநடத்துவதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதென பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1765326736 Sri Lanka showers Met 6
செய்திகள்இலங்கை

தீவிரமடையும் மழையினால் நீர்நிலைகள் நிரம்புகின்றன: வடகிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில் மீண்டும் அதிதீவிர மழைவீழ்ச்சி பதிவாகுமாயின், நீர்நிலைகளின் நீர்மட்டம்...

image 870x 66fcf5f77e960
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு: இது வெறும் வாக்குறுதி அல்ல, செயல் வடிவம் பெறும்- அமைச்சர் விஜித ஹேரத் உறுதி!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் என்றும், கடந்த காலங்களைப் போலன்றி...

IMG 2110
செய்திகள்உலகம்

சீனாவில் தேவாலயங்கள் மீது கடும் நடவடிக்கை: கட்டிடம் இடிப்பு மற்றும் முக்கிய தலைவர்கள் கைது!

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத ‘நிலத்தடி தேவாலயங்கள்’ (Underground Churches) மீது அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசு...

images 14 1
செய்திகள்உலகம்

வெனிசுவேலா ஜனாதிபதி கைது செய்யப்பட்டது ஐநா கோட்பாடுகளுக்கு எதிரானது – அமைச்சர் பிமல் ரத்நாயக்க கண்டனம்!

ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட வெனிசுவேலா ஜனாதிபதியை அமெரிக்கா கைது செய்துள்ளமையானது சர்வதேச சட்டங்களையும் ஐக்கிய...