இலங்கை பிரஜைகளின் திருமண சுதந்திரத்தைத் தடை செய்வது கேலிக்கூத்தானது.
இவ்வாறு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கைப் பிரஜை ஒருவர் வெளிநாட்டவரைத் திருமணம் செய்வதற்கு, பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற வேண்டும் என பதிவாளர் நாயகம் விடுத்துள்ள சுற்றறிக்கை, நாட்டுப் பிரஜைகளின் சுதந்திரத்தைப் பாதிக்கும்.
மேலும் அரசாங்கத்தின் முட்டாள்தனமான நடவடிக்கை தான் இதுவென்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை வெளிநாட்டினரை அரசில் சேர்ப்பதற்காக நாட்டின் அரசியலமைப்பைக் கூட திருத்தியமைக்கும் வகையில் தமது அதிகாரத்தை முழுமையாகப் பயன்படுத்திய ஆட்சியாளர்களின் இந்த முடிவு முறையற்றது என்றும் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே வெளியுலகில் இலங்கையை கேலிக்கூத்தாக்க வேண்டாம் எனவும் முன்னாள் சபாநாயகர் உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
#SrilankaNews
Leave a comment