2 26
இலங்கைசெய்திகள்

சகோதரனால் வீட்டிற்கே செல்வதை நிறுத்திய முன்னாள் அமைச்சர்

Share

சகோதரனால் வீட்டிற்கே செல்வதை நிறுத்திய முன்னாள் அமைச்சர்

தனது சகோதரரின் நிதி மோசடிகள் காரணமாக இரண்டு வருடங்களாக வீடு திரும்ப முடியவில்லை என்றும், தனது வீடு தற்போது இடிந்து விழுந்துள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார(Manusha Nanayakkara) தெரிவித்தார்.

அத்துடன் தனது தேர்தல் பிரச்சாரத்தையும் வேறொரு இடத்திலிருந்து நடத்தியதாகக் கூறினார்.

சகோதரனின் நிதிமோசடியை அம்பலப்படுத்தியவன் நானே

தனது சகோதரரின் நிதி மோசடியை முதலில் அம்பலப்படுத்தியவர் தான் என்றும், அது குறித்து தான் முறைப்பாடு அளித்ததிலிருந்து சகோதரனுடனான நட்பை துறந்துவிட்டதாகவும் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

தாம் ஒரே வயிற்றில் இருந்து பிறந்தாலும், தனிநபர்கள் ஒருவருக்கொருவர் வேறுபட்டவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

பின்லாந்து நாட்டில் தொழில்வாய்ப்பை பெற்று தருவதாக கூறி, பணமோசடி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர இரோஷன நாணயக்கார கடந்த டிசம்பர் 28ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) பிபிலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
veppam
இலங்கை

வெப்பமான வானிலையானது மேலும் அதிகரிக்கலாம் – வளிமண்டலவியல் திணைக்களம்.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள வானிலை அறிவிப்பின்படி, நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் நிலவும் மழையுடனான வானிலை அடுத்த...

hr d
இலங்கை

மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்படவுள்ள அதிகாரிகள்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, சிறைச்சாலைகள் சார்ந்த பகுதிகளில் பதிவான பதற்றமான சூழ்நிலைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக,...

Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...