பேருந்து ஆற்றில் விழுந்தமைக்கான காரணம் வெளியானது
இலங்கைசெய்திகள்

பேருந்து ஆற்றில் விழுந்தமைக்கான காரணம் வெளியானது

Share

பேருந்து ஆற்றில் விழுந்தமைக்கான காரணம் வெளியானது

மன்னப்பிட்டியில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானமை குறித்து நாடு பூராகவும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சாரதியின் கவனயீனம், பணத்திற்காக அனுமதிக்கும் பொலிஸார், பேருந்தினை பரிசோதிக்காத அதிகாரிகள் என பலர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கதுருவலையில் இருந்து பத்து நிமிடங்கள் பயணித்த நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

பேருந்து மிகவும் வேகமாக சென்றமையினால் பேருந்திலுள்ள பிரதான பாகம் ஒன்று உடைந்தமையினாலேயே பேருந்து ஆற்றில் வீழ்ந்ததாக முதற்கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

பேருந்து அதிவேகமாக பயணித்த போது வீதியில் குண்டும், குழியுமாக காணப்பட்டது. இந்த நிலையில் பேருந்து பாலத்திற்கு அருகில் பேருந்தின் பாகம் உடைந்தமையினால் பேருந்து மேல்நோக்கி பயணித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாகம் உடைந்த பேருந்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பாலத்தில் இருந்து ஓடையில் விழுந்துள்ளது.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படுவதுடன் மோட்டார் பரிசோதகரும் விசாரணைகளை மேற்கொள்வார் என பொலன்னறுவை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

பேருந்தை அஜாக்கிரதையாக அதிவேகமாக செலுத்தியதாலேயே விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ள காரணத்தினால் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சாரதி சந்திவெளியைச் சேர்ந்த நடராஜா வினோத் ராஜ் என்பவரை நேற்று நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் பாத்திமா வின்னா உத்தரவிட்டார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ரணில் – நாமல் புதிய கூட்டணி? ஐக்கிய மக்கள் சக்தியுடனான பேச்சு முறிந்தால் மாற்றுத் திட்டத்திற்கு தயார்!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) மற்றும் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (SJB)...

26 69807748e747c
செய்திகள்உலகம்

மேற்குக் கரையில் தீவிரமடையும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு: பூர்வீக நிலங்களிலிருந்து பலஸ்தீனியர்கள் வெளியேற்றம்!

இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில், பலஸ்தீனியர்களை அவர்களது பூர்வீக நிலங்களில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை இஸ்ரேல்...

articles2FUBt74sYE7LHAHmjLFnpe
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி முன் பிரசன்ன ரணதுங்க: அரசு தனது தோல்விகளை மறைக்கவே எங்களை அழைக்கிறது!

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவருடனான தொடர்பு குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, முன்னாள் அமைச்சர்...

image eae410f15d
செய்திகள்அரசியல்இலங்கை

NPP உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைது செய்ய உத்தரவு: கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில்...