25 9
இலங்கைசெய்திகள்

சத்திர சிகிச்சை தவறினால் உயிரிழந்த மூன்று பிள்ளைகளின் தந்தை: உறவினர்கள் கடும் குற்றச்சாட்டு

Share

சத்திர சிகிச்சை தவறினால் உயிரிழந்த மூன்று பிள்ளைகளின் தந்தை: உறவினர்கள் கடும் குற்றச்சாட்டு

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின்னர் உயிரிழந்த நபரின் மரணத்திற்கு சத்திரசிகிச்சை செய்த வைத்தியரே பொறுப்பேற்க வேண்டுமென உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

குறித்த நபர் நரம்பு துண்டிக்கப்பட்டு அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டமையினால் உயிரிழந்துள்ளதாக வைத்தியர் ஒருவர் தெரிவித்த போதிலும், நரம்பில் ஏதோ குத்தப்பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சத்திரசிகிச்சை செய்த வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மெதிரிகிரியவில் வசித்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 41 வயதான சஞ்சன ராஜபக்ஷ, விபத்திற்குள்ளாகியுள்ளார்.

இதன் காரணமாக இடது கை உணர்ச்சியற்று போயுள்ளது. இதற்கு சிகிச்சை எடுப்பதற்காக கண்டியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு சென்று வைத்தியர் ஒருவரை சந்தித்த போது நரம்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தனியார் வைத்தியசாலையில் அறுவை சிகிச்சை செய்வதற்கு சுமார் 15 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும், அரச வைத்தியசாலையில் செய்தால் நீண்ட நாள் காத்திருப்போர் பட்டியலில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் வைத்தியர் குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி, மூன்று பிள்ளைகளின் தந்தையான இவருக்கு கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த அறுவைசிகிச்சைக்குப் பின்னர், அவர் சுயநினைவை இழந்து, உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து மூளை இறக்கத் தொடங்கியதால், நோயாளியைக் காப்பாற்ற முடியாததால், சுவாசக் கருவியை அகற்றுவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

வைத்தியரின் அலட்சியத்தால் தனது கணவர் உயிரிழந்துள்ளதாக சஞ்சனவின் மனைவி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் சுகாதார அமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இருப்பினும், உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வெளியாகாத நிலையில், அவரது உடலை அடக்கம் செய்யுமாறு மரண விசாரணை அதிகாரி அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
vellam
இலங்கை

மீண்டும் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள் – கவலையில் மக்கள்

ஹட்டன் – டிக்கோயாவில் பல குடியிருப்புகள் மற்றும் தாழ் நிலப் பகுதிகள், மத்திய மலைநாட்டில் பெய்து...

பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...