IMG 20221006 WA0019
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

போசாக்கின்மையால் சிறுவர்கள்  கல்வி பாதிப்பு – உதவிக்கரம் நீட்டக் கோரிக்கை!

Share

பெற்றோரின் பொருளாதார நிலைமை காரணமாக வேலணை பிரதேசத்தில் முன்பள்ளி சிறார்களிடையே போசாக்கின்மை நிலை உருவாகி வருகின்றது. இது சிறார்களின் கல்வியை பெரிதும் பாதிப்படையச் செய்கின்றது.

இதிலிருந்து சிறார்களை மீட்டெடுக்க உதவிக்கரம் நீட்டுங்கள் என வேலணை பிரதேச முன்பிள்ளைப்பிராய அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சயானி பாலமுரளி கோரிக்கை விடுத்துள்ளார்.

தேவா திறந்தவெளி அரங்கில் வேலணை பிரதேச முன்பள்ளி சிறுவர் ஆசிரியர்கள் கௌரவிப்பு நிகவு இன்றையதினம் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்புரையாற்றிய வேலணை பிரதேச முன்பிள்ளைப்பிராய அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி சயானி பாலமுரளி மேலும் கூறுகையில் –

தற்பாதுள்ள பொருளாதார நெருக்கடி நிலைகாரணமாகவும் இதர பல காரணங்களாலும் எமது வேலணை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிக்குள் பல சிறார்களிடையே மந்த போசாக்கு நிலை காணப்படுகின்றது.

இதனால் பல சிறார்கள் முன்பள்ளிக்கு கற்றல் செயற்பாடுகளுக்கு வருகைதராத துர்ப்பாக்கிய நிலை உருவாகின்றது.

இந்நிலை தொடர்ந்தால் எமது இளம் சிறார்களின் எதிர்காலத்தை பெரிதும் பாதிக்கும் நிலை உருவாக்கிவிடும்.

இதனால் இப்பிரதேச சிறார்களின் போசாக்கு தொடர்பில் பொதுமக்களும் தன்னார்வலர்களும் அதிக அக்கறை செலுத்தவேண்டும்.

குறிப்பாக எமது வேலணை பிரதேசத்தில் 35 முன்பள்ளிகள் உள்ளன.

இவற்றுள் புங்குடுதீவில் உள்ள ஒரு முன்பள்ளி தற்போது செயற்பாடாத நிலையில் காணப்படுகின்றது.

அத்துடன் நயினாதீவு பகுதியிலுள்ள 4 முன்பள்ளிகளுக்கு தனியார் போசாக்குணவு வழங்க அனுசரணை வழங்கிவருகின்றனர்.

இதேவாளை 7 முன்பள்ளிகளுக்கு போசாக்குணவு வழங்குவதற்கு இதுவரை எந்தவொரு வழிமுறையும் கிடைக்கத நிலையே காணப்படுகின்றது.

இந்த 7 முன்பள்ளிகளது மாணவர்களுக்கு போசாக்குணவு வழங்குவது தொடர்பில் தன்னார்வலர்கள் முன்வரவேண்டும்

என அழைப்பு விடுத்துள்ள முன்பிள்ளைப்பிராய அபிவிருத்தி உத்தியோகத்தர், சிறார்களின் எதிர்காலம் சிறப்பாக உருவாக தானும் பலவழிகளில் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

#srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...