இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கச்சதீவு பிரதேசத்தை பொருளாதார மீட்பு வலயமாக செயற்படுத்துங்கள்! – அழிவில் இருந்து மீளலாம் என்கிறார் மருத்துவர் யமுனாநந்தா

download 6 1
Share

எரிபொருள் உட்பட அத்தியாவசிய பொருட்களை இலகுவாகப் பெற இலங்கை அரசின் சட்டத்தின் கீழும் இந்திய அரசின் சட்டத்தின் கீழும் கச்ச தீவு புனிதப் பிரதேசத்தை பொருளாதார மீட்பு வலயமாக செயற்படுத்தினால் எமக்கு ஏற்படுகின்ற பொருளாதார அழிவில் இருந்து மீளலாம் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைப் பிரதிப் பணிப்பாளரும் மருத்துவருமான சி.யமுனாநந்தா தெரிவித்தார்.

பொருளாதார பேரிடர் மீட்பு வலயம் அமைத்தல் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

இலங்கையின் பொருளாதார பேரிடர் ஓர் யுத்தமில்லாத யுத்தமாகும். அதாவது ஒருங்கிய சமர்க்களம் ( Hybrid war) ஆகும். கடந்த 2 மாதங்களுக்கு மேல் இந் நெருக்கடி தொடர்கின்றது. எரிபொருள் பற்றாக்குறை காரணமாக சகல சேவைகளும் முடங்கும் நிலைக்கு வந்து விட்டன.

கொரோனாத் தொற்றின் போது முழுமையாக இயங்கிய வைத்தியசேவைகள் தற்போது ஸ்தம்பிதம் அடையும் நிலையில் உள்ளன. இலங்கையின் வடபகுதிக்கு எரிபொருள் உட்பட அத்தியாவசிய பொருட்களை இலகுவாகப் பெற இலங்கை அரசின் சட்டத்தின் கீழும் இந்திய அரசின் சட்டத்தின் கீழும் கச்ச தீவு புனிதப் பிரதேசத்தை பொருளாதார மீட்பு வலயமாக செயற்படுத்தினால் எமக்கு ஏற்படுகின்ற பொருளாதார அழிவில் இருந்து மீளலாம். இது தொடர்பாக மதத் தலைவர்களும் அரச அதிகாரிகளும் ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எடுத்தல் அவசியம் ஆகும் – என்றுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...