maithri sajith
அரசியல்இலங்கைசெய்திகள்

அடுத்தகட்ட நகர்வு என்ன? – மைத்திரியுடன் சஜித் நேரில் பேச்சு

Share

அரசமைப்பு திருத்தம் ஊடாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்தல், அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை உட்பட அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் சம்பந்தமாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட 11 கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் நேற்றிரவு முக்கியத்துவமிக்க கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் தன்னெழுச்சி போராட்டங்கள் வெடித்துள்ளன. எனினும், பதவி விலகுவதற்கு அவர் மறுத்துவிட்டார். இதனால் அரசியல் நெருக்கடி தலைதூக்கியுள்ளது.

இந்த அரசியல் நெருக்கடிக்கு விரைவில் சுமூகதீர்வை எட்டும் நோக்கிலேயே மேற்படி அவசர சந்திப்பு இடம்பெற்றுள்ளது. மைத்திரிபால சிறிசேனவின் கொழும்பிலுள்ள இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் , விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உட்பட 11 கட்சிகளின் பிரதிநிதிகளும், இ.தொ.காவினரும், நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ள உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தரப்பில் இருந்து, நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்துவதற்கான அவசர அரசமைப்பு திருத்தம் அவசியமென்றும், அதனை மேற்கொண்ட பின்னர் ஏனைய விடயங்கள் பற்றி ஆராயலாம் என சந்திப்பின்போது சஜித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணைக்கான நகர்வுகள் சம்பந்தமாகவும் ஐக்கிய மக்கள் சக்தியால் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படுமானால் சில நிபந்தனைகளின் அடிப்படையில் சர்வக்கட்சி இடைக்கால அரசு பற்றி பரீசலிக்கலாம் என சஜித் தரப்பில் இருந்து தெரியப்படுத்தப்பட்டுள்ளது என அறியமுடிகின்றது.

எனினும், இவை சம்பந்தமாக இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை. மைத்திரிபால சிறிசேன உட்பட 11 கட்சிகளின் பிரதிநிதிகள், ஜனாதிபதியை சந்தித்து பேச்சு நடத்திய பிறகு, மீண்டும் சந்திப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...