bp firework
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அதிகரிக்கப்பட்ட பட்டாசு விலைகள்!!

Share

கடந்த இரண்டு மாதங்களில் உள்ளூர் மற்றும் இறக்குமதி மூலப்பொருட்களின் பற்றாக்குறை காரணமாக, பண்டிகைக் காலத்தில் பட்டாசு பொருட்களின் விலைகள் 60% அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பட்டாசு சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த சங்கத்தலைவர்,

மூலப்பொருட்களின் கடுமையான பற்றாக்குறையால் தொழில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பட்டாசு உற்பத்திக்கான காகிதங்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, காகிதத்தின் விலை 300% அதிகரித்துள்ளது.

நாட்டில் ஏற்கனவே இருக்கும் மூலப்பொருட்கள் 50% அதிகரிக்கப்பட்டுள்ளன.

சில டீலர்கள் மூலப்பொருட்களை இறக்குமதி செய்து 50% அதிகரிப்புடன் சந்தைக்கு வெளியிடுகின்றனர். எனவே, பட்டாசு உற்பத்தி செலவை அதிகரிக்க வேண்டும்.

மிகுந்த சிரமத்துடன் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டாலும், எதிர்பார்த்த லாப வரம்பில் அவற்றை விற்பனை செய்ய முடியுமா என்பது சந்தேகமாக உள்ளது.

பட்டாசு விலை உயர்வால் பண்டிகை காலங்களில் விற்பனை குறைய வாய்ப்புள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...