14 4
இலங்கைசெய்திகள்

தவறுக்காக இழப்பீட்டை முழுமையாக செலுத்திய மைத்திரி

Share

ரோயல் பார்க் கொலை வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால 01 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை செலுத்தி முடித்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான சந்தேக நபருக்கு மன்னிப்பு வழங்கிய குற்றத்துக்காக விதிக்கப்பட்ட இழப்பீட்டையே, சிறிசேன முழுமையாக செலுத்தி முடித்துள்ளதாக. அவரின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, ரோயல் பார்க் கொலை குற்றவாளி ஜூட் ஜெயமஹாவை மன்னித்து சிறிசேன பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இரத்து செய்து, அது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறியிருந்தது.

ஏனவே, பிரதிவாதியான மைத்திரிபால சிறிசேன, மனுதாரருக்கு 01 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

2005 ஆம் ஆண்டு ரோயல் பார்க் வீட்டுத் தொகுதியில்; சுவீடன்; நாட்டைச் சேர்ந்த யுவோன் ஜோன்சன் என்பவரை கொலை செய்த வழக்கில் ஜெயமஹாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

Share
தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...