14 4
இலங்கைசெய்திகள்

தவறுக்காக இழப்பீட்டை முழுமையாக செலுத்திய மைத்திரி

Share

ரோயல் பார்க் கொலை வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால 01 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை செலுத்தி முடித்துள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான சந்தேக நபருக்கு மன்னிப்பு வழங்கிய குற்றத்துக்காக விதிக்கப்பட்ட இழப்பீட்டையே, சிறிசேன முழுமையாக செலுத்தி முடித்துள்ளதாக. அவரின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, ரோயல் பார்க் கொலை குற்றவாளி ஜூட் ஜெயமஹாவை மன்னித்து சிறிசேன பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இரத்து செய்து, அது அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறியிருந்தது.

ஏனவே, பிரதிவாதியான மைத்திரிபால சிறிசேன, மனுதாரருக்கு 01 மில்லியன் ரூபாய் இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

2005 ஆம் ஆண்டு ரோயல் பார்க் வீட்டுத் தொகுதியில்; சுவீடன்; நாட்டைச் சேர்ந்த யுவோன் ஜோன்சன் என்பவரை கொலை செய்த வழக்கில் ஜெயமஹாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

Share
தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...