276996331 4921993074516195 5155549462485385903 n
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டாவை ஓரம் கட்டும் மொட்டு தரப்பு!

Share

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் படங்களை பொதுஜன பெரமுன கட்சி தவிர்த்து வருவதாக அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறிலங்கா பொதுஜன முன்னணியினால் நடாத்தப்படும் செய்தியாளர் சந்திப்புக்களின் போது பின்னணியில் ஓர் டிஜிட்டல் திரை காணப்படுவதுடன் அதில் கட்சியின் முக்கியஸ்தர்களது புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்படும்.எனினும் அண்மைய நாட்களில் அந்த டிஜிட்டல் பின்னணியில் முன்னாள் அதிபர் கோட்டாபயவின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த டிஜிட்டல் பின்னணியில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோரின் புகைப்படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சுழலும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இவ்வாறு கோட்டாபயவின் புகைப்படம் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து தமக்கு தெரியாது என கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
இலங்கை முழுவதும் கோட்டாபயவிற்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்திருந்ததுடன், அவர் நாட்டை விட்டு தப்பியோடும் அளவிற்கு மக்களின் போராட்டம் வீரியம் பெற்றிருந்தது.

இந்த நிலையில், பொதுஜன பெரமுன கட்சியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் இழக்க நேரிடும் என்ற அச்சமும், கோட்டாபய ராஜபக்சவை பொது மக்கள் நிராகரித்ததனால் அவரின் படங்களைப் பயன்படுத்துவது கட்சியின் எதிர்காலத்திற்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என்னும் காரணத்தினாலும் இவ்வாறு கோட்டாபயவின் படங்களை தவிர்க்க முடிவெடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...