1 29
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் மந்திர கோலால் மயங்காத ரணில்! மந்திரவாதிகள் வழங்கிய சக்தி

Share

முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்சவும், ரணில் விக்ரமசிங்கவும் சந்தித்த போது, மந்திர கோல் ஒன்று வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜோதிடம் மற்றும் மாந்திரீகம் மீது அதீத நம்பிக்கை கொண்ட ராஜபக்சர்கள், கடந்த ஆட்சிகளின் போது கேரளா மந்திரவாதிகளிடம் வசியம் செய்யும் மந்திர மோதிரங்களை பெற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

அதீத சக்திகளை கொண்ட தங்க மோதிரம் மற்றும் சிறிய தங்க கோல் ஒன்றையும் மகிந்த எப்போதும் தன்வசம் வைத்திருப்பார். அதன்மூலம் தனக்கு சாதகமான நிலைப்பாடுகளை எட்டுவதற்கு அதன் தாக்கம் செலுத்தியதாக பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில் காலில் சிகிச்சை செய்து கொண்ட மகிந்த ராஜபக்சவை, கடந்த வாரம் ரணில் விக்ரமசிங்க சந்தித்து நலம் விசாரித்திருந்தார்.

இதன்போது மகிந்த அணிந்திருந்த மந்திர கோல் என அழைக்கப்படும் மோதிரம் ஒன்று ரணிலுக்கு பரிசாக வழங்கப்பட்டதாக தெரிய வருகிறது.

எனினும் மாந்திரீகம் மீது நம்பிக்கை கொள்ளாத ரணில், குறித்த மந்திர கோலை தனது அலுவலக அறையிலுள்ள மேசையில் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ராஜபக்சர்களின் ஆட்சியின் போது இந்தியாவின் கேரளாவில் இருந்து அழைத்து வரப்பட்ட பிரபல மாந்திரீகர்களால் பாரிய யாகங்கள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 683bc7c6b9af4
இலங்கைசெய்திகள்

மக்களுக்கு பொருட்களை வழங்கியவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்

மக்களுக்கு பொருட்களை வழங்கியவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளதாக சர்வஜன பலய கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். முன்னாள்...

25 683beddc44bb5
இலங்கைசெய்திகள்

எரிவாயு விலை திருத்தம் தொடர்பான முக்கிய அறிவிப்பு..

ஜூன் மாதத்தில் தங்களது எரிவாயுவின் விலையில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என்று லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம்...

4
இலங்கைசெய்திகள்

இலங்கை வரும் ஐநாவின் உயர் அதிகாரி.. தொடர் அழுத்தத்தில் அநுர அரசாங்கம்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் வோல்கர் டர்க், இந்த மாதம் அல்லது...

images
இலங்கைசெய்திகள்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம்...