mahinda 1
அரசியல்இலங்கைசெய்திகள்

மஹிந்தவை சந்தித்தனர் பெற்றோலிய தொழிற்சங்க ஊழியர்கள்

Share

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள பெற்றோலிய தொழிற்சங்க ஊழியர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதியின் விஜேராம இல்லத்தில் சனிக்கிழமை (01) முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மறுசீரமைப்பு, நாட்டில் எரிபொருளை விநியோகிக்கும் உரிமையை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்குதல் உள்ளிட்ட விடயங்களை குறிப்பிட்டு வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அதன்போது எரிபொருள் விநியோகத்துக்கு இடையூறு விளைவித்த 4 தொழிற்சங்க தலைவர்கள் உள்ளிட்ட 20 பேர், கடந்த 29ஆம் திகதி கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டதுடன், கூட்டுத்தாபன வளாகம் மற்றும் சேமிப்பு முனையங்கள் ஆகியவற்றினுள் பிரவேசிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது.

குறித்த ஊழியர்களை மீண்டும் கடமையில் இணைத்துக்கொள்வது குறித்தே இந்த பேச்சு இடம்பெற்றுள்ளதாகவும் 20 பேரில் 19 பேர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டதாகவும் தெரியவருகிறது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...