mahinda 1 1
அரசியல்இலங்கைசெய்திகள்

வன்முறைச் சம்பவங்களுக்கு மஹிந்தவே பொறுப்பு! – டிலான் தெரிவிப்பு

Share

இலங்கையில் மே – 09 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்துக்கு மஹிந்த ராஜபக்சவும் பொறுப்புக்கூற வேண்டும் – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

” புதிய பிரதமரின்கீழ் சர்வக்கட்சி இடைக்கால அரசு அமைய வேண்டும் என ஏப்ரல் மாதம் முதல் வலியுறுத்தி வந்தேன். சபாநாயகரை நேரில் சந்தித்தும் கோரிக்கை விடுத்தேன். பிரதமர் பதவி விலகாவிட்டால் மாற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினேன்.

ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. அப்பாவி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டார். போராட்டக்காரர்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இப்படியெல்லாம் நடந்துதான் பிரதமர் பதவி விலகினால், சிலவேளை காலை 9 மணிக்கு பிரதமர் பதவி விலகியிருந்தால்கூட வன்முறை வெடித்திருக்காது. எனவே, மஹிந்த ராஜபகக்சவும் பொறுப்புக்கூற வேண்டும்.

பிரதமராக ரணில் தெரிவாகியுள்ளார். அவரை கடுமையான விமர்சித்தவன் நான். ஆனால் சர்வதேச ஒத்துழைப்பை பெறக்கூடிய நபர் அவர். எனவே, அவருக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்.” – என்றும். தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 6719ef7b673a7
அரசியல்செய்திகள்

டயானா கமகே கடவுச்சீட்டு விசா வழக்கு: மேலதிக சாட்சியங்களுக்காக பிப். 16க்கு ஒத்திவைப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மீது கடவுச்சீட்டு மற்றும் விசாக்கள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத்...

Waqf Board Donates Rs 10 Million 1170x658 1
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தில் சேதமடைந்த மதத் தலங்களைப் புனரமைக்க: வக்ஃப் சபை 10 மில்லியன் நிதி நன்கொடை!

கடந்த காலத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த மதஸ்தலங்களை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளுக்காக, வக்ஃப் சபையினால்...

Untitled
அரசியல்இலங்கைசெய்திகள்

கிராம உத்தியோகத்தர்களுக்கு எதிரான பொதுவான குற்றச்சாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும் – இம்ரான் மகரூப் கோரிக்கை!

நாட்டிலுள்ள ஒட்டுமொத்த கிராம உத்தியோகத்தர்களுக்கும் மனஅழுத்தம் ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிடப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும்,...

24 66c584aba0b91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வெல்லவாய – தனமல்வில விபத்து: ஒருவர் பலி, 4 பேர் காயம்!

வெல்லவாய – தனமல்வில வீதியில் உள்ள தெல்லுல்லப் பகுதியில் இன்று (டிசம்பர் 15) ஏற்பட்ட கோர...