2 16 scaled
இலங்கைசெய்திகள்

சீனாவிற்கு பறந்த மகிந்த ராஜபக்ச!

Share

சீனாவிற்கு பறந்த மகிந்த ராஜபக்ச!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa), சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச நேற்று(27.06.2024) சீனாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

பெய்ஜிங்கில்(Beijing) அமைதியான சகவாழ்வுக்கான ஐந்து கோட்பாடுகளின் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொள்ள அமைச்சர் வாங் யீ விடுத்த அழைப்பின் பேரிலே முன்னாள் ஜனாதிபதி சீனாவுக்கு சென்றுள்ளார்.

இதன்போது அவர், சீன பிரதமர் லீ கியாங்(Li Qiang) மற்றும் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ(Wang Yi ) ஆகியோருடன் அங்கு தங்கியிருக்கும் போது கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பிரதமர் லீ கியாங் மற்றும் அமைச்சர் யீ ஆகியோருடன் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம், பரஸ்பர ஆர்வமுள்ள பகுதிகள் மற்றும் இலங்கைக்கு நன்மை பயக்கும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து மகிந்த ராஜபக்ச கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நினைவு நிகழ்வுகளில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், பிரதமர் லீ கியாங், வெளியுறவு அமைச்சர் வாங் யீ மற்றும் முன்னணி சிபிசி உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

சிங்கப்பூர் வழியாக பெய்ஜிங் சென்ற ராஜபக்ச, ஜூலை 1ஆம் திகதி நாடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...