மகிந்த ராஜபக்சதான் சரத் பொன்சேகாவை இராணுவத் தளபதி பதவிக்குக் கொண்டு வந்தார் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
பொன்சேகா மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் அவரை உலகில் எந்த நாட்டுக்குக் கொண்டு சென்றாவது பாதுகாக்குமாறு கூறிய தலைவர்தான் மகிந்த ராஜபக்ச.
இப்படிபட்ட மகிந்தவையே பொன்சேகா இன்று கடுமையாக விமர்சித்து வருகின்றார். நாய் குரைப்பதால் சிங்கம் அஞ்சாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இறுதிப்போரின்போது மகிந்த ராஜபக்சவால் போர் நிறுத்தம் வழங்கப்பட்டது என்பது உட்பட பொன்சேகாவால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளையும் அவர் முற்றாக நிராகரித்தார்.
அரசியல் ரீதியில் வங்குரோத்தடைந்துள்ள பொன்சேகா, இன்னமும் போர் மனோநிலையிலேயே காணப்படுகின்றார் எனவும் மகிந்தவின் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
“வெள்ளைக்கொடி கதையைக் கூறி படையினரைக் காட்டிக் கொடுத்த நபர்தான் பொன்சேகா. இது நாட்டு மக்களுக்கும் தெரியும்.” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.