WhatsApp Image 2022 04 21 at 9.30.22 AM
அரசியல்இலங்கைசெய்திகள்

தற்போதைய அரசை ஏற்க மகாநாயக்கர்கள் மறுப்பு!

Share

அனைத்து கட்சிகளின் தலைவர்களுடனும் பேச்சு நடத்தி சர்வ கட்சி அரசை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு நான்கு பௌத்த பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கடித மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அஸ்கிரிய, மல்வத்து, அமரபுர மற்றும் ராமான்ய பீடங்களின் மகாநாயக்க தேரர்களே ஜனாதிபதிக்கு நேற்று அது தொடர்பில் கடிதமொன்றை அனுப்பியுள்ளனர்.

இதற்கமைய சர்வ கட்சி அரசை உருவாக்கும் போது ஜனாதிபதி மற்றும் அனைத்து கட்சித் தலைவர்களும் இணக்கம் காண வேண்டிய விடயங்களும் குறித்த கடிதத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது.

அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரதன்மையை நாட்டில் ஏற்படுத்தி மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதுகாப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை அமுலாக்கல், ஆறு மாதங்களுக்கு சர்வக்கட்சி அரசை அமைத்தல், அமைச்சரவை எண்ணிக்கையை 15 ஆக குறைத்தல் உட்பட 10 யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...