Mannar
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கோந்தைப்பிட்டி கடலில் மாயமான மீனவர்கள் சடலமாக மீட்பு!

Share

மன்னார் கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த 02 வது மீனவரும் இன்று (14) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு பிள்ளையின் தந்தையான மீனவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நிலையில், உடலமானது தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பருத்தித்துறையை சேர்ந்த மூன்று கடற்றொழிலாளர்கள் நேற்று முன்தினம் படகொன்றில் பயணித்துள்ளனர். இதன்போது, மன்னார் பள்ளிமுனை கடல் பகுதியில் படகின் இயந்திரம் பழுதானதால் ஒருவர் கடலில் இறங்கியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் மூன்று மீனவர்கள் கோந்தை பிட்டி கடலில் தமது படகை செலுத்தி தொழிலுக்குச் செல்ல சரி பார்த்துள்ளனர்.

இதன் போது படகில் வெளி இணைப்பு இயந்திரத்தை இணைந்து படகை செலுத்தி பார்த்துள்ளனர்.

குறித்த படகில் மீனவர்கள் உட்பட 8 பேர் இருந்துள்ளனர். படகின் வெளி இணைப்பு இயந்திரம் திடீரென இயங்காத நிலையில் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து காற்றின் காரணமாக படகு கடலில் சென்று கொண்டிருந்துள்ளது.

இதன்போது படகின் முன் அணியத்தில் நின்ற ஒருவர் திடீரென கடலில் வீழ்ந்து கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மற்றைய மீனவர் அவரைக் காப்பாற்ற கடலில் குதித்த நிலையிலேயே காணாமல் போயிருந்தார்.

எனினும் இருவரையும் மீட்க முடியவில்லை. நீண்ட நேரத்தின் பின்னர் படகின் வெளி இணைப்பு இயந்திரம் இயங்கிய நிலையில் இவர்கள் கரை திரும்பி ஏனைய மீனவர்களின் உதவியுடன் தேடியுள்ளனர்.

நேற்று திங்கட்கிழமை காலை முதல் மீனவர்கள் கடலில் தேடுதல் மேற்கொண்டனர்.

இதன் போது கோந்தை பிட்டி கடலில் இருந்து சற்று தொலைவில் தர்ஷன் என்பவர் மீட்கப்பட்ட நிலையில் மற்றைய மீனவரை மீனவர்கள் தேடிய நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை மன்னார் உப்பளம் கடற்கரை பகுதியில் வைத்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4JVJ5DK AFP 20251227 89488ZV v2 HighRes FilesYemenConflictProtestUaeSaudi jpg
செய்திகள்உலகம்

ஏமனிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுகிறது ஐக்கிய அரபு அமீரகம்: சவுதி – அபுதாபி விரிசல் பின்னணியா?

ஏமன் நாட்டில் பல ஆண்டுகளாக நிலைநிறுத்தப்பட்டிருந்த தனது படைகளைத் திரும்பப் பெறுவதாக ஐக்கிய அரபு அமீரகம்...

image baba9371d9
செய்திகள்அரசியல்இலங்கை

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்க மேலதிக அவகாசம்: ஜனவரி 31 வரை நீடிப்பு!

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை (Firearm Licenses) புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தை மேலும் ஒரு மாதத்தினால் நீடிக்கப்...

Foreign Ministry
செய்திகள்இலங்கை

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 3 ஆண்டு காலத் தவிப்பு: இலங்கைப் பெண்ணை மீட்க வெளிவிவகார அமைச்சு நேரடித் தலையீடு!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) தனது குழந்தையுடன் நாடு திரும்ப முடியாமல் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகச்...

rain
செய்திகள்இலங்கை

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் இன்று மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டின் பல மாகாணங்களில் இன்று (31) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...