இராணுவ கண்காணிப்புக்கள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் சாவகச்சேரிலுள்ள மாமனிதர் நடராஜா ரவிராஜ் இல்லத்தில் மாலை 6.05 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சாவகச்சேரி பிரதேச சபை உபதவிசாளர் செ.மயூரன், சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர், சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் சி.சிவநேசன் ஆகியோர் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
பிரதான ஈகைச்சுடரை மூன்று மாவீரர்களின் சகோதரன் சிவஞானம் சிவநேசன் ஏற்றி வைத்தார்.
அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றவேளையில் இராணுவத்தினர், பொலிஸார், மற்றும் இராணுவ புலனாய்வாளர்கள் ரவிராஜின் வீட்டை சுற்றிவளைத்துடன், வீட்டுக்குள் நுழைந்து தீபமேற்றி அஞ்சலி செலுத்தியவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டனர்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தடைசெய்யப்பட்ட நினைவுச் சின்னங்களை வைத்து அஞ்சலி செலுத்தினார்களா என்று விசாரணை செய்த பின்னர் இராணுவத்தினர் அவ்விடத்தில் இருந்து அகன்று சென்றனர்.
#SriLankaNews
Leave a comment