COVID 4
இலங்கைசெய்திகள்

கொரோனா ஏற்பட்டோருக்கு நுரையீரல் பாதிப்பு!!

Share

கொரோனா ஏற்பட்டோருக்கு நுரையீரல் பாதிப்பு!!

கொரோனாத் தொற்று ஏற்பட்டோருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என சுவாச நிபுணர் மருத்துவர் துஷார கலபட தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனாத் தொற்று ஏற்பட்டு, அதிலிருந்து மீண்டோரில் 5 முதல் 10 வீதமானோருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

தொற்று ஏற்பட்டு குணமாகி சில வாரங்களின் பின்னர் சுவாசிப்பதில் சிரமம், சோர்வு, தலைவலி, உடல்வலி, இருமல், தூக்கமின்மை மற்றும் ஞாபகமறதி போன்ற அறிகுறிகள் பலருக்கு ஏற்படுகின்றன என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான அறிகுறிகள் ஏற்படுவோருக்கு அரச மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு பிந்தைய கிளினிக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த அறிகுறிகள் இரண்டு வாரங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக நீடித்தால் மருத்துவமனைகளின் சுவாசப்பிரிவு மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்வது சிறந்தது – என்றார்.

Share
தொடர்புடையது
world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹோமகமவில் இன்று 12 மணிநேர நீர்வெட்டு!

தற்போது நிலவி வரும் கடும் வறண்ட வானிலை காரணமாக, ஹோமகம மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்...

world 6
செய்திகள்உலகம்

உள்கட்டமைப்பைத் தாக்கினால் பதிலடி: டிரம்பிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான மிலிட்டரி அச்சுறுத்தல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள்...