COVID 4
இலங்கைசெய்திகள்

கொரோனா ஏற்பட்டோருக்கு நுரையீரல் பாதிப்பு!!

Share

கொரோனா ஏற்பட்டோருக்கு நுரையீரல் பாதிப்பு!!

கொரோனாத் தொற்று ஏற்பட்டோருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என சுவாச நிபுணர் மருத்துவர் துஷார கலபட தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனாத் தொற்று ஏற்பட்டு, அதிலிருந்து மீண்டோரில் 5 முதல் 10 வீதமானோருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

தொற்று ஏற்பட்டு குணமாகி சில வாரங்களின் பின்னர் சுவாசிப்பதில் சிரமம், சோர்வு, தலைவலி, உடல்வலி, இருமல், தூக்கமின்மை மற்றும் ஞாபகமறதி போன்ற அறிகுறிகள் பலருக்கு ஏற்படுகின்றன என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான அறிகுறிகள் ஏற்படுவோருக்கு அரச மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு பிந்தைய கிளினிக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த அறிகுறிகள் இரண்டு வாரங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக நீடித்தால் மருத்துவமனைகளின் சுவாசப்பிரிவு மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்வது சிறந்தது – என்றார்.

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...