Gas 2
இலங்கைசெய்திகள்

எரிவாயு விலைகள் குறைப்பு!

Share

12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை இன்று நள்ளிரவு முதல் ரூ. 1005 ஆல் குறைக்கப்படுகிறது என லிட்ரோ லங்கா தலைவர் முடித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதற்கேற்ப 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை ரூ.3728 ஆகும். 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை ரூ.402 ஆல் குறைக்கப்பட்டு ரூ. 1,502 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை ரூ. 700 ஆகும். இந்த விலை குறைப்பு மாற்றங்கள் அனைத்தும் இன்று இரவு முதல் அமுலாகும்.

நிதியமைச்சு, நுகர்வோர் விவகார அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் லிட்ரோவின் முயற்சிகளையடுத்து இந்த விலை சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, லிட்ரோ நிறுவனம் எரிவாயு சிலிண்டரின் விலையைக் குறைத்ததையடுத்து லாஃப்ஸ் நிறுவனமும் எரிவாயு சிலிண்டர் விலையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக லாஃப்ஸ் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்று நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1,290 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 3,990 ரூபாவாகும். 5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 516 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,596 ரூபாவாகும்.

#SRiLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...