lohan
இலங்கைசெய்திகள்

பதவி விலகுகிறார் லொஹான்! – ராஜினாமா கடிதம் கையளிப்பு

Share

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவுக்கு அனுப்பி வைத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மதுபோதையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்த சிறைச்சாலைகள் முகாமைத்துவ மற்றும் சிறைக்கைதிகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளை மண்டியிட வைத்து கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.

தனது கைத்துப்பாக்கியை காட்டி உங்களை கொலை செல்வேன் என மிரட்டியுள்ளார்.

இந்தச் சம்பவம் நாட்டில் கடுமையான கண்டனங்களையும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அதையடுத்து லொஹான் ரத்வத்தவை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் கட்டளையிட்டுள்ளனர்.

இந்தநிலையில், தனது ராஜினாமா கடிதத்தை லொஹான் ரத்வத்த ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

lohab

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் புதிய மைல்கல்: இந்த ஆண்டில் 7 இலட்சம் பயணிகள் வருகை!

இலங்கையின் சுற்றுலாத்துறை இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்குள்ளேயே 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் என்ற...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நான்கு லீற்றர் பெற்றோல் வைத்திருந்தவருக்கு 21 நாட்கள் சிறை: நிக்கவரட்டிய நீதிமன்றம் தீர்ப்பு

சட்டவிரோதமான முறையில் நான்கு லீற்றர் பெற்றோலைத் தனது கைவசத்தில் வைத்திருந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட 48 வயதுடைய...

Untitled 1
செய்திகள்அரசியல்இலங்கை

இந்தியாவைப் பின்பற்றி எரிபொருள் வரியைக் குறையுங்கள்: ஜனாதிபதிக்குச் சஜித் பிரேமதாச அறைகூவல்!

இந்திய அரசாங்கம் அண்மையில் எரிபொருள் மீதான வரிகளைக் கணிசமாகக் குறைத்திருப்பதைப் போன்று, இலங்கை அரசாங்கமும் வரிகளைக்...

02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...