மார்ச் மாதத்துக்குள் உள்ளூராட்சி தேர்தல்!

Provincial Council election 1

உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நடத்த எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரத்தின் கீழ் உள்ளூராட்சி மன்றங்களுக்கு செப்டம்பர் 20ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடத்த முடியுமென சட்டத்தரணி புஞ்சிஹேவா தெரிவித்தார்.

ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி வாக்காளர் பட்டியல்கள் சான்றளிக்கப்படவுள்ளதால், உள்ளூராட்சி சபை தேர்தலை பின்னர் நடத்துவது குறித்து தீர்மானிக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version