அரசியல்இலங்கைசெய்திகள்

அரசுடன் இணையோம்! – கூறுகிறார் ஜயசேகர

Share
WhatsApp Image 2021 10 29 at 8.09.00 PM
Share

” இது சர்வக்கட்சி அரசு கிடையாது. எனவே, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது அரசாங்கத்தில் இணையாது. அமைச்சு பதவிகளை பொறுப்பேற்காது.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” சர்வக்கட்சி அரசை நிறுவுமாறு நாம் கோரிக்கை விடுத்திருந்தோம். எனினும், அமையப்பெற்றுள்ள அரசானது சர்வக்கட்சி அரசு அல்ல. உறுப்பினர்களை வளைத்துபோட்டு அமைக்கப்பட்ட தொங்கு நிலை அரசாகும். இவ்வாறான அரச கட்டமைப்பில் இணைய மாட்டோம்.

எனினும், நாட்டு மக்களின் நலன்கருதி, வெளியில் இருந்து அரசுக்கு ஆதரவு வழங்கப்படும். முறையாக சர்வக்கட்சி அரசு உருவாக்கப்பட்டால், அரசில் இணைந்து பங்களிப்பு வழங்கப்படும். அத்துடன், எதிரணியில் இருந்து 21 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு சுதந்திரக்கட்சி ஆதரவு வழங்கும்.” எனவும் அவர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...