WhatsApp Image 2021 10 29 at 8.09.00 PM
அரசியல்இலங்கைசெய்திகள்

அரசுடன் இணையோம்! – கூறுகிறார் ஜயசேகர

Share

” இது சர்வக்கட்சி அரசு கிடையாது. எனவே, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது அரசாங்கத்தில் இணையாது. அமைச்சு பதவிகளை பொறுப்பேற்காது.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” சர்வக்கட்சி அரசை நிறுவுமாறு நாம் கோரிக்கை விடுத்திருந்தோம். எனினும், அமையப்பெற்றுள்ள அரசானது சர்வக்கட்சி அரசு அல்ல. உறுப்பினர்களை வளைத்துபோட்டு அமைக்கப்பட்ட தொங்கு நிலை அரசாகும். இவ்வாறான அரச கட்டமைப்பில் இணைய மாட்டோம்.

எனினும், நாட்டு மக்களின் நலன்கருதி, வெளியில் இருந்து அரசுக்கு ஆதரவு வழங்கப்படும். முறையாக சர்வக்கட்சி அரசு உருவாக்கப்பட்டால், அரசில் இணைந்து பங்களிப்பு வழங்கப்படும். அத்துடன், எதிரணியில் இருந்து 21 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு சுதந்திரக்கட்சி ஆதரவு வழங்கும்.” எனவும் அவர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...