செய்திகள்அரசியல்இலங்கை

அரசிலிருந்து வெளியேறலாம்! – பங்காளிக் கட்சிகளுக்கு பதிலடி

SLPP
Share

கூட்டணி அரசியல் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளுக்கு பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்து வருகின்றது.

அத்துடன், எந்நேரத்தில் வேண்டுமானாலும் அரசிலிருந்து வெளியேறலாம் எனவும், மொட்டு சின்னம் இல்லாவிட்டால் பங்காளிகளுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை எனவும் விமர்சித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி.கூறியவை வருமாறு,

” மைத்திரிபால சிறிசேன, விமல்வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்டவர்களுக்கு தனித்து போட்டியிட்டு வெற்றிபெற முடியுமா? ‘மொட்டு’ சின்னம் இல்லாவிட்டால் அவர்களால் வெற்றிபெற்றிருக்கமுடியாது. ‘மொட்டு’ சின்னத்தால்தான் நானும் வெற்றிபெற்றேன். எனவே, கூட்டு பொறுப்பை அவர்கள் காக்க வேண்டும்.

உள்ளக பிரச்சினைகள் தொடர்பில் அரசுக்குள் பேச்சு நடத்தி தீர்வைக்காண முற்பட்டிருக்க வேண்டும். அதனைவிடுத்து வெளியில் விமர்சனங்களை முன்வைத்ததால்தான் பங்காளிக்கட்சி தலைவர்களுக்கு ஜனாதிபதி சந்திப்புக்கு நேரம் வழங்கவில்லை என நினைக்கின்றேன்.

அரசிலிருந்து வெளியேறுவதாக இருந்தால் அவர்கள் செல்லலாம். அரசுக்குள் இருப்பதாக இருந்தால் அரசால் எடுக்கப்படும் தீர்மானங்களை ஏற்கவேண்டும்.” – என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...