செய்திகள்அரசியல்இலங்கை

அரசிலிருந்து வெளியேறலாம்! – பங்காளிக் கட்சிகளுக்கு பதிலடி

SLPP
Share

கூட்டணி அரசியல் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளுக்கு பதிலடி கொடுக்க ஆரம்பித்துள்ள ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி, சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்து வருகின்றது.

அத்துடன், எந்நேரத்தில் வேண்டுமானாலும் அரசிலிருந்து வெளியேறலாம் எனவும், மொட்டு சின்னம் இல்லாவிட்டால் பங்காளிகளுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை எனவும் விமர்சித்துள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி.கூறியவை வருமாறு,

” மைத்திரிபால சிறிசேன, விமல்வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்டவர்களுக்கு தனித்து போட்டியிட்டு வெற்றிபெற முடியுமா? ‘மொட்டு’ சின்னம் இல்லாவிட்டால் அவர்களால் வெற்றிபெற்றிருக்கமுடியாது. ‘மொட்டு’ சின்னத்தால்தான் நானும் வெற்றிபெற்றேன். எனவே, கூட்டு பொறுப்பை அவர்கள் காக்க வேண்டும்.

உள்ளக பிரச்சினைகள் தொடர்பில் அரசுக்குள் பேச்சு நடத்தி தீர்வைக்காண முற்பட்டிருக்க வேண்டும். அதனைவிடுத்து வெளியில் விமர்சனங்களை முன்வைத்ததால்தான் பங்காளிக்கட்சி தலைவர்களுக்கு ஜனாதிபதி சந்திப்புக்கு நேரம் வழங்கவில்லை என நினைக்கின்றேன்.

அரசிலிருந்து வெளியேறுவதாக இருந்தால் அவர்கள் செல்லலாம். அரசுக்குள் இருப்பதாக இருந்தால் அரசால் எடுக்கப்படும் தீர்மானங்களை ஏற்கவேண்டும்.” – என்றார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....