rtjy 206 scaled
இலங்கைசெய்திகள்

இந்தியாவிற்கு தப்பிச்சென்ற பாதாள உலகக்குழுவின் தலைவர்!

Share

இந்தியாவிற்கு தப்பிச்சென்ற பாதாள உலகக்குழுவின் தலைவர்!

பாதாள உலகக்குழுவின் பலம் வாய்ந்த தலைவராக கருதப்படும் கணேமுல்ல சஞ்சீவ மற்றும் கோத்தா அசங்க ஆகியோர் பாதுகாப்புப்படையினரால் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி வருவதாக புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இருவரையும் கைது செய்ய பொலிஸ் குழுக்கள் முற்பட்டபோது, ​​அவர்கள் 2018 ஆம் ஆண்டு படகு மூலம் இந்தியாவிற்கு தப்பிச்சென்றிருந்தனர்.

இந்தியாவிற்கு தப்பிச்சென்ற கணேமுல்ல சஞ்சீவ தனது சகா கோட்டா அசங்கவுடன் இணைந்து போதைப்பொருள் கடத்தல், கப்பம் பெறுதல் மற்றும் கொலைகளை மேற்கொள்வதற்கு அவர்களின் ஆதரவாளர்களை வழிநடத்தியதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இந்திய பாதுகாப்புப்படையினர் இருவரையும் கைது செய்தததாக இதுவரை தகவல் கிடைக்கவில்லை என்று உளவுத்துறை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

மேலும், சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் பரவி வருவதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1276730 0.jpeg
செய்திகள்உலகம்

ஈரான் சிறைப்பிடித்த எண்ணெய்க் கப்பல் ‘தலாரா’ விடுவிப்பு: 21 பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர்!

ஹாா்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரான் கடந்த வாரம் சிறைப்பிடித்த, மாா்ஷல் தீவுகளின் கொடியேற்றப்பட்ட ‘தலாரா’ (Talara)...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

images 5 7
செய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சோகம்: கால் தவறி கிணற்றில் வீழ்ந்த வெளிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் நபரொருவர் கால் தவறி கிணற்றுக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர்...

images 4 8
இலங்கைசெய்திகள்

அரச மருத்துவமனைகளில் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு: சிகிச்சை சேவைகள் பாதிக்கப்படும் அபாயம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்!

அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்...