இந்தியாவிற்கு தப்பிச்சென்ற பாதாள உலகக்குழுவின் தலைவர்!
பாதாள உலகக்குழுவின் பலம் வாய்ந்த தலைவராக கருதப்படும் கணேமுல்ல சஞ்சீவ மற்றும் கோத்தா அசங்க ஆகியோர் பாதுகாப்புப்படையினரால் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவி வருவதாக புலனாய்வு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தொடர் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இருவரையும் கைது செய்ய பொலிஸ் குழுக்கள் முற்பட்டபோது, அவர்கள் 2018 ஆம் ஆண்டு படகு மூலம் இந்தியாவிற்கு தப்பிச்சென்றிருந்தனர்.
இந்தியாவிற்கு தப்பிச்சென்ற கணேமுல்ல சஞ்சீவ தனது சகா கோட்டா அசங்கவுடன் இணைந்து போதைப்பொருள் கடத்தல், கப்பம் பெறுதல் மற்றும் கொலைகளை மேற்கொள்வதற்கு அவர்களின் ஆதரவாளர்களை வழிநடத்தியதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இந்திய பாதுகாப்புப்படையினர் இருவரையும் கைது செய்தததாக இதுவரை தகவல் கிடைக்கவில்லை என்று உளவுத்துறை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
மேலும், சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும் பொலிஸ் தலைமையகத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் பரவி வருவதாக பொலிஸ் தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தியுள்ளார்.
1 Comment