24 65fd50b44c7a3
இலங்கைசெய்திகள்

9 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானம்

Share

9 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானம்

நாட்டில் 9 அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களுக்கான விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, வாடிக்கையாளர்கள் இந்த தயாரிப்புகளை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விலை குறைப்பு செய்யப்படவுள்ள 9 பொருட்களின் புதிய விலைகள் பின்வருமாறு அமைகின்றன.

ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயம் 100 ரூபாவினால் குறைக்கப்பட்டு 550 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும்.

சிவப்பு கௌபி ஒரு கிலோ கிராம் 52 ரூபாவினால் குறைக்கப்பட்டு 998 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

1150 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் வெள்ளை கௌபி 50 ரூபா குறைக்கப்பட்டு 1100 ரூபாவிற்கு விற்கப்படும்.

பாஸ்மதி அரிசி 20 ஒரு கிலோ கிராம் 20 ரூபா குறைக்கப்பட்டு 650 ரூபாவாக விற்பனை செய்யப்படும்.

சிவப்பு வெங்காயம் 10 ரூபா குறைக்கப்பட்டு புதிய விலையாக 350 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வெள்ளை பெரிய வெங்காய ஒரு கிலோ கிராம் 05 ரூபா குறைக்கப்பட்டு 265 ரூபாவிற்கு விற்கப்படவுள்ளது.

சிவப்பு சீனி ஒரு கிலோ கிராம் 430 ரூபாவிலிருந்து 425 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

சோயா ஒரு கிலோ கிராம் 5 ரூபா குறைக்கப்பட்டு 595 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும்.

170 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கிராம் சிவப்பரிசி 2 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...

Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...