12 2
இலங்கைசெய்திகள்

இந்தியாவிடம் எதிர்ப்பை வெளியிட்ட இலங்கை

Share

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைப்பதற்கு எதிர்ப்பை வெளியிட்டதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பில் இந்தியா செய்த பரிந்துரையை நிராகரித்ததாக அமைச்சர் ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும் மன்னாருக்கும் திருகோணமலைக்கும் இடையிலான அதிவேக நெடுஞ்சாலை நிர்மானத்திற்கும் எதிர்ப்பை வெளியிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த கால அரசாங்கங்கள் இந்த திட்டங்களுக்கு இணங்கியிருந்த போதிலும் தமது அரசாங்கம் இந்த யோசனைகளை நிராகரித்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் பாலம் அமைப்பது மற்றும் திருகோணமலை – மன்னார் அதிவேக நெடுஞ்சாலை என்பனவற்றினால் நாடு பிளவடையக் கூடிய நிலைமை ஏற்படக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் திருகோணமலை சக்தி வள திட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் அரசியல் பொருளாதார நிலைமைகள் சமமானதாக காணப்பட்டால் பாலம் அமைப்பதில் பிரச்சினை கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையில் பாலம் அமைத்த போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார நிலை சமமானதாக காணப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
4JVJ5DK AFP 20251227 89488ZV v2 HighRes FilesYemenConflictProtestUaeSaudi jpg
செய்திகள்உலகம்

ஏமனிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுகிறது ஐக்கிய அரபு அமீரகம்: சவுதி – அபுதாபி விரிசல் பின்னணியா?

ஏமன் நாட்டில் பல ஆண்டுகளாக நிலைநிறுத்தப்பட்டிருந்த தனது படைகளைத் திரும்பப் பெறுவதாக ஐக்கிய அரபு அமீரகம்...

image baba9371d9
செய்திகள்அரசியல்இலங்கை

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்க மேலதிக அவகாசம்: ஜனவரி 31 வரை நீடிப்பு!

துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை (Firearm Licenses) புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசத்தை மேலும் ஒரு மாதத்தினால் நீடிக்கப்...

Foreign Ministry
செய்திகள்இலங்கை

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 3 ஆண்டு காலத் தவிப்பு: இலங்கைப் பெண்ணை மீட்க வெளிவிவகார அமைச்சு நேரடித் தலையீடு!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) தனது குழந்தையுடன் நாடு திரும்ப முடியாமல் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகச்...

rain
செய்திகள்இலங்கை

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் இன்று மழை: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

நாட்டின் பல மாகாணங்களில் இன்று (31) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...